1 பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு,
2 நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்;
3 நான் என்னுடைய தகப்பனுக்குப் பிரியமான மகனும்,
4 அவர் எனக்குப் போதித்துச் சொன்னது:
5 ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி;
6 அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்;
7 ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி;
8 நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்;
9 அது உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடத்தைக் கொடுக்கும்;
10 என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்;
11 ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்;
12 நீ அவைகளில் நடக்கும்போது உன்னுடைய நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை;
13 புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள்,
14 துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே;
15 அதை வெறுத்துவிடு, அதின் வழியாகப் போகாதே;
16 தீங்கு செய்யாமல் அவர்களுக்கு தூக்கம் வராது;
17 அவர்கள் துன்மார்க்கத்தின் அப்பத்தைச் சாப்பிட்டு,
18 நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும்
19 துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்;
20 என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி;
21 அவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக;
22 அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் உயிரும்,
23 எல்லாக் காவலோடும் உன்னுடைய இருதயத்தைக் காத்துக்கொள்,
24 வாயின் தாறுமாறுகளை உன்னைவிட்டு அகற்றி,
25 உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக;
26 உன்னுடைய நடைகளைச் சீர்தூக்கிப்பார்;
27 வலதுபுறமோ இடதுபுறமோ சாயாதே;