1 தேவனே, என் ஜெபப் பாடலைக் கேட்டருளும்.
2 நான் எங்கிருந்தாலும், எப்படிச் சோர்ந்து போனாலும் நான் உம்மை உதவிக்குக் கூப்பிடுவேன்.
3 நீரே எனக்குப் பாதுகாப்பான இடம்!
4 நான் என்றென்றும் உம்முடைய கூடாரத்தில் வாழ்ந்திருப்பேன்.
5 தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனையைக் கேட்டீர்.
6 அரசனுக்கு நீண்ட ஆயுளைக் கொடும்.
7 அவர் என்றென்றும் தேவனோடு வாழட்டும்!
8 நான் என்றைக்கும் உமது நாமத்தைத் துதிப்பேன்.