Salmos 56

TAM2008

1 தேவனே, ஜனங்கள் என்னைத் தாக்குகிறார்கள், நீர் என்மேல் இரக்கமாயிரும்.

2 என் பகைவர்கள் தொடர்ந்து என்னைத் தாக்குகிறார்கள்.

3 நான் அஞ்சும்போது,

4 நான் தேவனை நம்புகிறேன், எனவே அஞ்சேன். ஜனங்கள் என்னைத் துன்புறுத்த முடியாது!

5 என் பகைவர்களோ என் வார்த்தைகளை எப்போதும் புரட்டுகிறார்கள்.

6 என்னைக் கொல்லும் வகைதேடி,

7 தேவனே, அவர்களைத் தப்பவிடாதேயும்.

8 என் வருத்தத்தை நீர் அறிகிறீர்.

9 எனவே நான் உம்மிடம் உதவி வேண்டும்போது, என் பகைவர்களைத் தோல்வியடையச் செய்யும்.

10 தேவன் தந்த வாக்குறுதிக்காக நான் அவரைத் துதிப்பேன்.

11 நான் தேவனை நம்பியிருப்பதால் அஞ்சேன்.

12 தேவனே, நான் உமக்கு விசேஷ பொருத்தனைகளைப் பண்ணினேன்.

13 ஏனெனில் நீர் என்னை மரணத்தினின்று காத்தீர்.

Ler em outra tradução

Comparar lado a lado