Salmos 50

TAM2008

1 தெய்வங்களுக்கெல்லாம் தேவனாகிய கர்த்தர் பேசுகிறார்.

2 சீயோனிலிருந்து பிரகாசிக்கும் தேவன் அழகானவர்.

3 நம் தேவன் வருகிறார், அவர் அமைதியாக இரார்.

4 தமது ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்கு

5 தேவன் கூறுகிறதாவது, “என்னைப் பின்பற்றுகிறவர்களே,

6 தேவனே நியாயாதிபதி,

7 “எனது ஜனங்களே, நான் கூறுவதைக் கேளுங்கள்!

8 உங்கள் பலிகளைக் குறித்து நான் குறை கூறமாட்டேன்.

9 உங்கள் வீட்டின் எருதுகளையோ

10 எனக்கு அம்மிருகங்கள் தேவையில்லை.

11 உயர்ந்த மலையின் ஒவ்வொரு பறவையையும் நான் அறிவேன்.

12 எனக்குப் பசியில்லை! எனக்குப் பசித்தாலும் உணவுக்காக உன்னைக் கேட்கமாட்டேன்.

13 எருதுகளின் மாமிசத்தை நான் புசிப்பதில்லை.

14 எனவே ஸ்தோத்திர பலிகளை தேவனுக்குக் கொண்டுவந்து அவரோடு இருக்கும்படி வாருங்கள்.

15 தேவன், “இஸ்ரவேலரே, துன்பம் நேர்கையில் என்னிடம் விண்ணப்பம் செய்யுங்கள்!

16 தேவன் தீயோரைப் பார்த்து, “நீங்கள் எனது சட்டங்களைக் குறித்துப் பேசுகிறீர்கள்.

17 ஆனால் நான் உங்களைத் திருத்தும்போது அதை ஏன் வெறுக்கிறீர்கள்?

18 நீங்கள் ஒரு திருடனைப் பார்க்கிறீர்கள், அவனோடு சேர்வதற்காக ஓடுகிறீர்கள்.

19 நீங்கள் தீயவற்றைப் பேசிப் பொய்களைச் சொல்கிறீர்கள்.

20 உங்கள் சொந்த சகோதரரையும் பிறரையும் குறித்து எப்போதும் தீயவற்றையே சொல்கிறீர்கள்.

21 நீங்கள் இத்தீய செயல்களைச் செய்கிறீர்கள், நான் அமைதியாக இருப்பேன் என்று நினைக்கிறீர்கள்.

22 நீங்கள் தேவனை மறந்திருக்கிறீர்கள்.

23 எனவே ஒருவன் ஸ்தோத்திர காணிக்கை செலுத்தினால் அவன் என்னை உண்மையிலேயே மகிமைப்படுத்துகிறான்.

Ler em outra tradução

Comparar lado a lado