1 தேவனே உமது மிகுந்த அன்பான தயவினாலும் மிகுந்த இரக்கத்தினாலும் என்னிடம் இரக்கமாயிரும்.
2 தேவனே, எனது குற்றத்தைத் துடைத்துவிடும்.
3 நான் பாவம் செய்தேனென அறிவேன்.
4 நீர் தவறெனக்கூறும் காரியங்களைச் செய்தேன்.
5 நான் பாவத்தில் பிறந்தேன்.
6 தேவனே! நான் உண்மையும் நேர்மையும் உள்ளவனாக விரும்பினால்
7 ஈசோப்பு செடியால் என்னைத் தூய்மையாக்கும்.
8 என்னை மகிழ்ச்சியாக்கும். மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கும் வகையைக் கூறும்.
9 எனது பாவங்களைப் பாராதேயும்!
10 தேவனே, எனக்குள் ஒரு பரிசுத்த இருதயத்தைச் சிருஷ்டியும்!
11 என்னைத் தூரத் தள்ளாதேயும்!
12 உமது உதவி என்னை மகிழ்விக்கிறது!
13 நீர் கூறும் வாழ்க்கை நெறியைப் பாவிகளுக்குப் போதிப்பேன்,
14 தேவனே, என்னைக் கொலைக் குற்றவாளியாக்காதேயும்.
15 என் ஆண்டவரே, நான் என் வாயைத் திறந்து உம்மைத் துதித்துப் பாடுவேன்!
16 நீர் பலிகளை விரும்பவில்லை.
17 தேவன் விரும்பும் பலி பணிவான ஆவியே.
18 தேவனே, சீயோனிடம் நல்லவராகவும் இரக்கமுடையவராகவும் இரும்.
19 அப்போது நீர் நல்ல பலிகளையும் தகன பலி முழுவதையும் ஏற்று மகிழமுடியும்.