Salmos 38

TAM2008

1 கர்த்தாவே, நீர் கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும்.

2 கர்த்தாவே, நீர் என்னைத் துன்புறுத்துகிறீர்.

3 நீர் என்னைத் தண்டித்தீர்.

4 தீய காரியங்களைச் செய்ததினால் நான் குற்ற வாளியானேன்.

5 நான் அறிவில்லாத காரியமொன்றைச் செய்தேன்.

6 நான் குனிந்து வளைந்தேன்.

7 காய்ச்சலினாலும் வலியினாலும்

8 நான் பெரிதும் தளர்ந்து போகிறேன்.

9 என் ஆண்டவரே, என் அலறலின் சத்தத்தைக் கேட்டீர்.

10 என் காய்ச்சலினால் என் பெலன் மறைந்தது.

11 என் நோயினிமித்தம் என் நண்பர்களும், அயலகத்தாரும் என்னைச் சந்திப்பதில்லை.

12 என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீய காரியங்களைச் சொல்கிறார்கள்.

13 நான் கேட்கமுடியாத செவிடனைப் போலானேன்.

14 நான், ஒருவனைக் குறித்தும் பிறர் கூறுபவற்றைக் கேட்க முடியாத மனிதனைப் போலானேன்.

15 கர்த்தாவே எனக்கு ஆதரவளியும்.

16 நான் ஏதேனும் பேசினால், என் பகைவர்கள் என்னைப் பார்த்து நகைப்பார்கள்.

17 தீயக் காரியங்களைச் செய்த குற்றவாளி நான் என்பதை அறிவேன்.

18 கர்த்தாவே, நான் செய்த தீயக் காரியங்களைக் குறித்து உம்மிடம் பேசினேன்.

19 என் பகைவர்கள் உயிரோடும் ஆரோக்கியத்தோடும் இருக்கிறார்கள்.

20 என் பகைவர்கள் எனக்குத் தீயக் காரியங்களைச் செய்தனர்.

21 கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும்.

22 விரைந்து வந்து எனக்கு உதவும்!

Ler em outra tradução

Comparar lado a lado