1 நான் கர்த்தரை உதவிக்காகக் கூப்பிடுவேன்.
2 நான் கர்த்தரிடம் என் சிக்கல்களைச் சொல்வேன்.
3 என் பகைவர்கள் எனக்குக் கண்ணி வைத்திருக்கிறார்கள்.
4 நான் சுற்றிலும் பார்த்தேன், என் நண்பர்களைக் காணவில்லை.
5 எனவே நான் கர்த்தரிடம் உதவிக்காக அழுதேன்.
6 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். நீர் எனக்கு மிகுதியாகத் தேவைப்படுகிறீர்.
7 இந்தக் கண்ணியிலிருந்து தப்பிச்செல்ல எனக்கு உதவும்.