Salmos 10

TAM2008

1 கர்த்தாவே, ஏன் தூரத்தில் தங்கியிருக்கிறீர்?

2 பெருமையும் தீமையும் நிறைந்த ஜனங்கள் தீய திட்டங்களை வகுக்கிறார்கள்.

3 தீய ஜனங்கள் தங்களுடைய இச்சைகளைக் குறித்து பெருமை கொள்வார்கள்.

4 தீயோர் தேவனைப் பின்பற்றக்கூடாத அளவிற்கு அதிகப் பெருமை பாராட்டுவார்கள். அவர்கள் தீய திட்டங்களையே வகுப்பார்கள்.

5 தீயோர் எப்போதும் கோணலானவற்றையே செய்வார்கள்.

6 தீயவை அவர்களை ஒருபோதும் அணுகுவதில்லை என நினைப்பார்கள்.

7 அந்த ஜனங்கள் எப்போதும் சபிப்பார்கள்.

8 அந்த ஜனங்கள் மறைவிடங்களில் இருந்து ஜனங்களைப் பிடிக்கக் காத்திருப்பார்கள்.

9 மிருகங்களை உண்பதற்காய் கொல்லக் காத்திருக்கும் சிங்கங்களைப் போலாவார்கள்.

10 மீண்டும் மீண்டும் ஏழைகளையும் பிறரையும் துன்புறுத்துவார்கள்.

11 எனவே, “தேவன் எங்களை மறந்தார். என்றென்றும் தேவன் நம்மிடமிருந்து விலகிச் சென்றார்.

12 கர்த்தாவே, எழுந்து செயல்படும்!

13 தீயோர் தேவனுக்கு எதிராவார்கள்.

14 கர்த்தாவே, தீயோர் செய்யும் கொடுமைகளையும் தீமைகளையும் நீர் காண்கிறீர்.

15 கர்த்தாவே, தீயோரை அழித்துவிடும்.

16 உமது நாட்டிலிருந்து அவர்களை அகற்றும்.

17 கர்த்தாவே, ஏழை ஜனங்களின் தேவையைக் கேட்டறிந்தீர்.

18 கர்த்தாவே, பெற்றோரற்ற பிள்ளைகளைக் காப்பாற்றும்.

Ler em outra tradução

Comparar lado a lado