Salmos 9

TAM2008

1 என் முழு இருதயத்தோடும் நான் கர்த்தரைத் துதிப்பேன்.

2 நீர் என்னை மிகவும் சந்தோஷப்படுத்துகிறீர்.

3 என் பகைவர்கள் உம்மிடமிருந்து ஓட முயன்றார்கள்.

4 நீர் நல்ல நீதிபதி. உமது சிங்காசனத்தில் நீதிபதியாக அமர்ந்தீர்.

5 பிற ஜனங்களை நீர் கண்டித்தீர் கர்த்தாவே, நீர் அந்தத் தீயோரை அழித்தீர்.

6 பகைவன் ஒழிக்கப்பட்டான்!

7 ஆனால் கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்.

8 உலகில் உள்ள எல்லா ஜனங்களுக்கும் கர்த்தர் நியாயமான தீர்ப்பு வழங்குவார்.

9 பல குழப்பங்கள் இருப்பதால் பல ஜனங்கள் அகப்பட்டுக் காயமுற்றனர்.

10 உமது நாமத்தை அறிந்த ஜனங்கள் உம்மை நம்பவேண்டும்.

11 சீயோனில் வாழும் ஜனங்களே கர்த்தரைத் துதித்துப் பாடுங்கள்.

12 உதவிநாடிப் போனோரைக் கர்த்தர் நினைவு கூருவார்.

13 நான் தேவனிடம் இந்த ஜெபத்தைக் கூறினேன்:

14 அப்போது கர்த்தாவே, எருசலேமின் வாசல்களில் நான் உம்மைத் துதித்துப் பாடக்கூடும்.

15 பிறரை அகப்படுத்த யூதரல்லாத ஜனங்கள் குழிகளைத் தோண்டினார்கள்.

16 கர்த்தர் அத்தீயோரைப் பிடித்தார்.

17 தேவனை மறக்கும் ஜனங்கள் தீயோர்கள்.

18 துன்பப்பட்ட ஜனங்களை தேவன் மறந்துவிட்டாரென சில நேரங்களில் தோன்றும்.

19 கர்த்தாவே, எழுந்து தேசங்களை நியாந் தீரும்.

20 ஜனங்களுக்குப் பாடம் கற்பியும்.

Ler em outra tradução

Comparar lado a lado