1 அப்போது நாகமாவின் சோப்பார் யோபுவுக்குப் பதில் கூறினான்.
2 “இவ்வார்த்தைப் பெருக்குக்குப் பதில் தரப்பட வேண்டும்!
3 யோபுவே, உனக்குச் சொல்ல எங்களிடம் பதில் இல்லை என்று நினைக்கிறாயா?
4 யோபுவே, நீ தேவனிடம், ‘என் விவாதங்கள் சரியானவை,
5 யோபுவே, தேவன் உனக்குப் பதில் சொல்லி,
6 தேவன் ஞானத்தின் இரகசியங்களை உனக்குச் சொல்லமுடியும்.
7 “யோபுவே, நீ உண்மையாகவே தேவனைப் புரிந்துகொண்டதாக நினைக்கிறாயா?
8 அது பரலோகத்திற்கும் உயர்ந்தது.
9 தேவனுடைய அறிவின் அளவு உயர்ந்தது.
10 “தேவன் உன்னைச் சிறைபிடித்து நியாய சபைக்கு அழைத்துவந்தால்,
11 உண்மையாகவே, யார் தகுதியற்றவரென்று தேவன் அறிகிறார்.
12 ஒரு காட்டுக் கழுதை மனிதனை ஈன்றெடுக்காது.
13 ஆனால் யோபுவே, உன் இருதயத்தை தேவனுக்கு நேராக தயார்ப்படுத்த வேண்டும்.
14 உன் வீட்டிலிருக்கும் பாவத்தை நீ அகற்றிப்போட வேண்டும்.
15 அப்போது நீ தேவனை வெட்கமின்றிப் பார்க்கக்கூடும்.
16 அப்போது நீ உன் தொல்லைகளை மறக்கக் கூடும்.
17 நண்பகலில் சூரியனின் பிரகாசத்தைக் காட்டிலும், உன் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும்.
18 அப்போது நீ பாதுகாவலை உணர்வாய்.
19 நீ ஓய்வெடுக்கப் படுத்துக்கொள்வாய், யாரும் உனக்குத் தொல்லை தரமாட்டார்கள்.
20 தீயோர் உன்னிடம் உதவியை எதிர்பார்ப்பர், அவர்கள் தங்கள் தொல்லைகளிலிருந்து தப்பமுடியாது.