1 அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக:
2 “இதற்காக பதில் கொடுக்க என் சிந்தனைகள் என்னை ஏவுகிறதினால்
3 நிந்தித்தேன் என்று நான் கடிந்து கொள்ளப்பட்டதைக் கேட்டேன்;
4 துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும்,
5 அவர் மனிதனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல்
6 அவனுடைய மேன்மை வானபரியந்தம் உயர்ந்தாலும்,
7 அவன் தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோவான்;
8 அவன் ஒரு கனவைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்;
9 அவனைப் பார்த்த கண் இனி அவனைப் பார்ப்பதில்லை;
10 அவனுடைய பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்;
11 அவனுடைய எலும்புகள் அவனுடைய இளவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து,
12 பொல்லாப்பு அவனுடைய வாயிலே இனிமையாயிருப்பதால்,
13 அதை விடாமல் அடக்கி,
14 அவனுடைய ஆகாரம் அவன் குடல்களில் மாறி,
15 அவன் விழுங்கின செல்வத்தைக் கக்குவான்;
16 அவன் விரியன்பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்;
17 தேனும் நெய்யும் ஓடும் வாய்க்கால்களையும் ஆறுகளையும் அவன் காண்பதில்லை.
18 தான் பிரயாசப்பட்டுத் தேடினதை அவன் விழுங்காமல் திரும்பக் கொடுப்பான்;
19 அவன் ஒடுக்கி, ஏழைகளைக் கைவிட்டு,
20 தன் வயிறு திருப்தி அடையாமல் இருந்ததினாலும்,
21 அவனுடைய ஆகாரத்தில் ஒன்றும் மீதியாவதில்லை;
22 அவன் வேண்டுமென்கிற பரிபூரணம் அவனுக்கு வந்தபின்,
23 தன் வயிற்றை நிரப்பத்தக்கது இன்னும் அவனுக்கு இருந்தாலும்,
24 இரும்பு ஆயுதத்திற்கு அவன் தப்பியோடினாலும் வெண்கல அம்பு அவனை உருவ எய்யும்.
25 உருவின பட்டயம் அவன் சரீரத்தையும்,
26 அவன் ஒளிக்கும் இடங்களில் காரிருள் அடங்கியிருக்கும்;
27 வானங்கள் அவனுடைய குற்றத்தை வெளிப்படுத்தி, பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும்.
28 வெள்ளத்தினால் அவனுடைய வீட்டின் சம்பத்துப் கரைந்து போய்விடும்;
29 இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும்,