1 நான் ஒரு ஏழை, உதவியற்ற மனிதன்.
2 கர்த்தாவே, நான் உம்மைப் பின்பற்றுபவன்.
3 என் ஆண்டவரே, என்னிடம் தயவாயிரும்.
4 ஆண்டவரே, உமது கைகளில் என் ஜீவனை வைக்கிறேன்.
5 ஆண்டவரே, நீர் நல்லவர், கிருபையுள்ளவர்.
6 கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேளும்.
7 கர்த்தாவே, தொல்லைமிக்க காலத்தில் நான் உம்மிடம் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன்.
8 தேவனே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை.
9 ஆண்டவரே, நீர் ஒவ்வொருவரையும் உண்டாக்கினீர்.
10 தேவனே, நீர் மேன்மையானவர்!
11 கர்த்தாவே, உமது வழிகளை எனக்குப் போதியும்.
12 என் ஆண்டவராகிய தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன்.
13 தேவனே, என்னிடம் மிகுந்த அன்பு காட்டுகிறீர்.
14 தேவனே, பெருமைமிக்க மனிதர்கள் என்னைத் தாக்குகிறார்கள்.
15 ஆண்டவரே, நீர் தயவும் இரக்கமும் உள்ள தேவன்.
16 தேவனே, நீர் எனக்குச் செவிகொடுப்பதை எனக்குக் காண்பித்து, என்மீது தயவாயிரும்.
17 தேவனே, நீர் எனக்கு உதவுவீர் என்பதற்கு ஒரு அடையாளத்தைத் தாரும்.