Salmos 71

TAM2008

1 கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்,

2 உமது நல்ல செயலினால், நீர் என்னை மீட்பீர். நீர் என்னைக் காப்பாற்றுவீர்.

3 பாதுகாப்பிற்காக ஓடிவரக்கூடிய புகலிடமான அரணாக நீர் எனக்கு இரும்.

4 என் தேவனே, கெட்ட ஜனங்களிடமிருந்து என்னை மீட்டருளும்.

5 என் ஆண்டவரே, நீரே என் நம்பிக்கை.

6 நான் பிறப்பதற்கு முன்பிருந்தே உம்மையே சார்ந்திருக்கிறேன்.

7 நீரே என் பெலத்தின் இருப்பிடம்.

8 நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து நான் எப்போதும் பாடிக்கொண்டிருக்கிறேன்.

9 நான் வயது முதிர்ந்தவனாகிவிட்டதால் என்னைத் தள்ளிவிடாதேயும்.

10 என் பகைவர்கள் எனக்கெதிராகத் திட்டங்கள் வகுத்தார்கள்.

11 என் பகைவர்கள், “போய் அவனைப் பிடியுங்கள்!

12 தேவனே, நீர் என்னை விட்டு விலகாதேயும்!

13 என் பகைவர்களைத் தோற்கடியும்!

14 பின் நான் உம்மை எப்போதும் நம்புவேன்.

15 நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் ஜனங்களுக்குக் கூறுவேன்.

16 என் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது பெருமையைப்பற்றி நான் கூறுவேன்.

17 தேவனே, நான் சிறுவனாக இருக்கையிலேயே நீர் எனக்குப் போதித்துள்ளீர்.

18 இப்போது நான் வயது முதிர்ந்தவன், என் தலைமுடி நரைத்துவிட்டது.

19 தேவனே, உமது நன்மை வானங்களுக்கும் மேலாக எட்டுகிறது.

20 தொல்லைகளையும் தீயகாலங்களையும் நான் காணச் செய்தீர்.

21 முன்னிலும் பெரியக் காரியங்களைச் செய்ய, நீர் எனக்கு உதவும்.

22 வீணையை மீட்டி, நான் உம்மைத் துதிப்பேன்.

23 நீர் என் ஆத்துமாவைக் காத்தீர். என் ஆத்துமா மகிழ்ந்திருக்கும்.

24 எப்போதும் உமது நன்மையை என் நாவு பாடும்.

Ler em outra tradução

Comparar lado a lado