1 எனது தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்.
2 நீர் எனக்கு உதவாவிட்டால், சிங்கத்தால் பிடிக்கப்பட்ட மிருகத்தைப் போலாவேன்.
3 எனது தேவனாகிய கர்த்தாவே, நான் தவறு ஒன்றும் செய்யவில்லை.
4 என் நண்பர்களுக்கு நான் தீங்கேதும் செய்யவில்லை.
5 ஆனால் ஒரு பகைவன் என்னைத் துரத்துகிறான்.
6 கர்த்தாவே எழுந்து உமது கோபத்தைக் காட்டும்!
7 கர்த்தாவே, ஜனங்களை நியாயந்தீரும்.
8 கர்த்தாவே எனக்கு நியாயம் வழங்கும்.
9 தீயோரைத் தண்டியும், நல்லோருக்கு உதவும்.
10 நேர்மையான இருதயம் கொண்ட ஜனங்களுக்குத் தேவன் உதவுகிறார்.
11 தேவன் ஒரு நல்ல நீதிபதி,
12 தேவன் ஒரு முடிவெடுத்தால் அவர் அதிலிருந்து மாறுவதில்லை.
13 தீய ஜனங்களைத் தண்டிக்க தேவன் ஆயத்தமாயிருக்கிறார்.
14 சில ஜனங்கள் எப்போதும் தீயவற்றைத் திட்டமிடுவார்கள்.
15 அவர்கள் பிறரை வலைக்குட்படுத்தித் துன்புறுத்த முயல்வார்கள்.
16 அவர்கள் தங்களுக்கான தண்டனையைப் பெறுவார்கள்.
17 கர்த்தர் நல்லவராயிருப்பதால் அவரைத் துதிப்பேன்.