Salmos 69

TAM2008

1 தேவனே, எல்லாத் தொல்லைகளிலுமிருந்து என்னைக் காப்பாற்றும்.

2 நான் நிற்பதற்கு இடமில்லை.

3 உதவி வேண்டிக் கூப்பிடுவதால் நான் சோர்ந்து போகிறேன்.

4 என் தலையின் முடிகளைக் காட்டிலும் எனக்கு அதிகமான பகைவர்கள் இருக்கிறார்கள்.

5 தேவனே, என் பாவங்களை நீர் அறிவீர்.

6 என் ஆண்டவரே, சர்வ வல்லமையுள்ள கர்த்தரே, உம்மைப் பின்பற்றுவோர் என்னைக் கண்டு வெட்கப்படாதபடி செய்யும்.

7 என் முகம் வெட்கத்தால் மூடப்பட்டிருக்கிறது.

8 என் சகோதரர்கள் என்னை ஒரு அந்நியனைப் போல நடத்துகிறார்கள்.

9 உமது ஆலயத்தின் மீது கொண்ட என் ஆழ்ந்த உணர்ச்சிகள் என்னை அழித்துக் கொண்டிருக்கின்றன.

10 நான் அழுது, உபவாசம் மேற்கொண்டேன்.

11 துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு முரட்டு ஆடைகளை உடுத்துகிறேன்.

12 பொது இடங்களில் அவர்கள் என்னைப் பற்றிப் பேசுகிறார்கள்.

13 ஆனால் இது கர்த்தராகிய உம்மை நோக்கி நான் உமக்காக ஜெபிக்கும் ஜெபம்.

14 என்னைச் சேற்றிலிருந்து இழுத்து வெளியேற்றும்.

15 அலைகள் என்னை அமிழ்த்தாதபடிச் செய்யும்.

16 கர்த்தாவே, உமது அன்பு நல்லது. உமது முழுமையான அன்பினால் எனக்குப் பதிலளியும்.

17 உமது பணியாளிடமிருந்து விலகிப் போய்விடாதேயும்.

18 வந்து, என் ஆத்துமாவைக் காப்பாற்றும்.

19 நான் அடைந்த வெட்கத்தை நீர் அறிந்திருக்கிறீர்.

20 வெட்கம் என்னை நசுக்கிற்று!

21 அவர்கள் எனக்கு உணவையல்ல, விஷத்தைக் கொடுத்தார்கள்.

22 அவர்கள் மேசைகள் உணவால் நிரம்பியிருந்தன.

23 அவர்கள் குருடாகி, அவர்கள் முதுகுகள் தளர்ந்துபோகும் என நான் நம்புகிறேன்.

24 உமது கோபத்தை அவர்கள் உணரட்டும்.

25 அவர்கள் வீடுகள் வெறுமையடையச் செய்யும்.

26 அவர்களைத் தண்டியும், அவர்கள் ஓடிப் போவார்கள்.

27 அவர்கள் செய்த தீய காரியங்களுக்காக அவர்களைத் தண்டியும்.

28 ஜீவ புத்தகத்திலிருந்து அவர்கள் பெயர்களை எடுத்துப்போடும்.

29 நான் கவலையும் புண்பட்டவனுமானேன்.

30 நான் தேவனுடைய நாமத்தைப் பாடல்களால் துதிப்பேன்.

31 இது தேவனை சந்தோஷப்படுத்தும்!

32 ஏழை ஜனங்களே, நீங்கள் தேவனைத் தொழுதுகொள்ள வந்தீர்கள்.

33 கர்த்தர் ஏழைகளுக்கும் திக்கற்றோருக்கும் செவிசாய்க்கிறார்.

34 பரலோகமும், பூமியும் தேவனைத் துதிக் கட்டும்.

35 கர்த்தர் சீயோனை மீட்பார்.

36 அவரது பணியாட்களின் தலைமுறையினர் அத்தேசத்தைப் பெறுவார்கள்.

Ler em outra tradução

Comparar lado a lado