1 தேவனே, என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
2 தீமை செய்யும் ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
3 பாரும், பலவான்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள்.
4 அவர்கள் என்னைத் துரத்துகிறார்கள்.
5 நீர் இஸ்ரவேலரின் தேவனாகிய, சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்.
6 அத்தீயோர், ஊரினுள் மாலையில் நுழைந்து
7 அவர்களின் பயமுறுத்தல்களையும் நிந்தனையையும் கேளும்.
8 கர்த்தாவே, அவர்களைப் பார்த்து நகைத்தருளும்.
9 தேவனே, நீரே என் பெலன், நான் உமக்காகக் காத்திருக்கிறேன்.
10 தேவன் என்னை நேசிக்கிறார். நான் வெற்றியை காண அவர் எனக்கு உதவுவார்.
11 தேவனே, அவர்களை வெறுமனே கொன்று விடுவீரானால், என் ஜனங்கள் அதனை மறந்துவிடுவார்கள்.
12 அத்தீயோர் சபித்துப் பொய்க் கூறுவர்.
13 உமது கோபத்தில் அவர்களை அழியும்.
14 ஊர் முழுவதும் உறுமியவாறே சுற்றியலையும் நாய்களைப்போன்று அத்தீயோர் இரவில் ஊருக்குள் வந்தனர்.
15 அவர்கள் உணவுக்காகத் தேடியலைவார்கள், ஆனால் உணவேதும் அவர்களுக்கு அகப்படுவதில்லை.
16 ஆனால் நான் உம்மைப் பாடல்களால் வாழ்த்தித் துதிப்பேன்.
17 உம்மை வாழ்த்தும் என் பாடல்களை நான் பாடுவேன்.