1 கர்த்தாவே, என் வார்த்தைகளைக் கேளும்.
2 எனது தேவனாகிய அரசனே,
3 கர்த்தாவே, என் அன்பளிப்புகளை காலைதோறும் உமக்கு படைக்கிறேன்.
4 தேவனே, தீய ஜனங்கள் உம்மருகே வருவதை நீர் விரும்புகிறதில்லை.
5 மூடர் உம்மிடம் வர இயலாது,
6 பொய் கூறும் ஜனங்களை நீர் அழிக்கிறீர்.
7 கர்த்தாவே, உமது மிகுந்த இரக்கத்தினால் நான் உமது ஆலயத்திற்கு வருவேன்.
8 கர்த்தாவே, சரியான வாழ்க்கை வாழ உமது வழியைக்காட்டும்.
9 அந்த ஜனங்கள் உண்மை பேசுவதில்லை அவர்கள் உண்மையைப் புரட்டும் பொய்யர்கள்.
10 தேவனே, அவர்களைத் தண்டியும்.
11 ஆனால் தேவனை நம்பும் ஜனங்கள் களிகூரட்டும்.
12 கர்த்தாவே, நல்லோருக்கு நீர் நன்மை செய்தால்