1 நல்லோரே, கர்த்தருக்குள் களிப்படையுங்கள்!
2 சுரமண்டலத்தை இசைத்துக் கர்த்தரைத் துதியுங்கள்!
3 புதுப்பாட்டை அவருக்குப் பாடுங்கள்!
4 தேவனுடைய வாக்கு உண்மையானது!
5 நன்மையையும் நேர்மையையும் தேவன் நேசிக்கிறார்.
6 கர்த்தர் கட்டளையிட, உலகம் உருவாயிற்று.
7 கடலின் தண்ணீரை ஒரே இடத்தில் தேவன் ஒன்று திரட்டினார்.
8 பூமியிலுள்ளோர் யாவரும் கர்த்தருக்குப் பயந்து அவரை மதிக்கவேண்டும்.
9 ஏனெனில் தேவன் கட்டளையிட, அக்காரியம் நிறைவேறுகிறது.
10 எல்லோருடைய அறிவுரையையும் பயனற்றுப்போகச் செய்ய கர்த்தராலாகும்.
11 கர்த்தருடைய அறிவுரை என்றென்றும் நல்லது.
12 கர்த்தரை தேவனாக ஏற்றுக்கொண்ட ஜனங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
13 பரலோகத்திலிருந்து கர்த்தர் கீழே பார்த்து,
14 அவரது உயர்ந்த சிங்காசனத்திலிருந்து
15 ஒவ்வொருவனின் மனதையும் தேவன் படைத்தார்.
16 அரசன் தனது சொந்த வல்லமையால் காப்பாற்றப்படுவதில்லை.
17 போரில் குதிரைகள் உண்மையான வெற்றியைத் தருவதில்லை.
18 கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை கவனித்துக் காப்பாற்றுகிறார்.
19 தேவன் அந்த ஜனங்களை மரணத்தினின்று காக்கிறார்.
20 எனவே நாம் கர்த்தருக்காகக் காத்திருப்போம்.
21 தேவன் என்னை மகிழ்ச்சியடையச் செய்கிறார்.
22 கர்த்தாவே, நாங்கள் உம்மை உண்மையாக தொழுதுகொள்கிறோம்!