Salmos 29

TAM2008

1 தேவனுடைய புத்திரரே, கர்த்தரைத் துதியுங்கள்!

2 கர்த்தரைத் துதித்து அவர் நாமத்தை கனப்படுத்துங்கள்!

3 கடலின்மேல் கர்த்தர் தமது குரலை எழுப்புகிறார்.

4 கர்த்தருடைய குரல் அவர் வல்லமையைக் காட்டும்.

5 கர்த்தருடைய குரல் பெரிய கேதுரு மரங்களையும் சின்னஞ்சிறு துண்டுகளாக்கும்.

6 கர்த்தர் லீபனோனைக் குலுக்குகிறார்.

7 கர்த்தருடைய குரல் மின்னலைப்போல் ஒளிவிட்டுத் தாக்குகிறது.

8 கர்த்தருடைய குரல் பாலைவனத்தைக் குலுக்குகிறது.

9 கர்த்தருடைய குரல் மானை அஞ்சச்செய்யும்.

10 வெள்ளப்பெருக்கின்போது கர்த்தர் அரசராயிருந்தார்.

11 கர்த்தர்தாமே அவரது ஜனங்களைப் பாதுகாப்பாராக.

Ler em outra tradução

Comparar lado a lado