Salmos 136

TAM2008

1 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.

2 தேவாதி தேவனைத் துதியங்கள்!

3 கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்!

4 ஒருவராய் அற்புதமான அதிசயங்களைச் செய்கிறவராகிய தேவனைத் துதியங்கள்!

5 வானங்களை உண்டாக்குவதற்கு ஞானத்தைப் பயன்படுத்திய தேவனைத் துதியங்கள்!

6 தேவன் கடலின்மேல் உலர்ந்த தரையை உண்டாக்கினார்.

7 தேவன் பெரிய ஒளிகளை (சூரிய, சந்திர, நட்சத்திரங்களை) உண்டாக்கினார்.

8 தேவன் பகலை ஆளச் சூரியனை உண்டாக்கினார்.

9 தேவன் இரவை ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்கலையும் உண்டாக்கினார்.

10 எகிப்தில் முதற்பேறான ஆண்களையும் விலங்குகளையும் தேவன் கொன்றார்.

11 தேவன் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து அழைத்துச் சென்றார்.

12 தேவன் அவரது மிகுந்த வல்லமையையும், பெலத்தையும் காட்டினார்.

13 தேவன் செங்கடலை இரண்டாகப் பிளந்தார்.

14 தேவன் இஸ்ரவேலரைக் கடலின் வழியாக அழைத்துச் சென்றார்.

15 தேவன் செங்கடலில் பார்வோனையும் அவனது படையையும் அமிழ்த்தினார்.

16 தேவன் ஜனங்களை வனாந்தரத்தின் வழியாக நடத்திச் சென்றார்.

17 தேவன் வல்லமையுள்ள அரசர்களைத் தோற்கடித்தார்.

18 தேவன் பலமுள்ள அரசர்களைத் தோற்கடித்தார்.

19 தேவன் எமோரியரின் அரசனாகிய சீகோனைத் தோற்கடித்தார்.

20 தேவன் பாஷானின் அரசனாகிய ஓகைத் தோற்கடித்தார்.

21 தேவன் அவர்களது தேசத்தை இஸ்ரவேலருக்குக் கொடுத்தார்.

22 இஸ்ரவேலருக்குப் பரிசாக தேவன் அத்தேசத்தைக் கொடுத்தார்.

23 நாம் தோற்டிக்கப்பட்டபோது தேவன் நம்மை நினைவுக்கூர்ந்தார்.

24 தேவன் நமது பகைவர்களிடமிருந்து நம்மை விடுவித்தார்.

25 தேவன் ஒவ்வொருவருக்கும் உணவளிக்கிறார்.

26 பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்!

Ler em outra tradução

Comparar lado a lado