1 கர்த்தரை துதியுங்கள்!
2 அவன் சந்ததியினர் பூமியில் பெரியோராயிருப்பார்கள்.
3 அம்மனிதனின் குடும்பம் செல்வத்தில் சிறந்திருக்கும்.
4 தேவன் நல்லோருக்கு இருளில் பிரகாசிக்கும் ஒளியைப் போன்றவர்.
5 தயவும், தயாளகுணமும் பெற்றிருப்பது ஒருவனுக்கு நல்லது.
6 அவன் விழமாட்டான்,
7 அவன் தீய செய்திக்குப் பயப்படமாட்டான்.
8 அவன் தன்னம்பிக்கையுள்ளவன். அவன் பயப்படமாட்டான்.
9 அவன் ஏழைகளுக்கு இலவசமாகப் பொருள்களைக் கொடுக்கிறான்.
10 தீயோர் இதைக்கண்டு கோபமடைவார்கள்.