Salmos 104

TAM2008

1 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!

2 ஒருவன் அங்கியைத் தரித்திருப்பதைப் போல நீர் ஒளியை அணிந்துகொண்டிருக்கிறீர்.

3 தேவனே நீர் அவற்றிற்கு மேலாக உமது வீட்டைக் கட்டியிருக்கிறீர்.

4 தேவனே, உமது தூதர்களைக் காற்றைப் போல் உண்டாக்கினீர்.

5 தேவனே, நீர் பூமியை அதன் அஸ்திபாரங்களின் மீது ஸ்தாபித்தீர்.

6 நீர் அதனைத் தண்ணீரால் போர்வையைப் போன்று மூடினீர்.

7 நீர் கட்டளையிட்டபோது, தண்ணீர் விலகியோடிற்று.

8 தண்ணீர் பர்வதங்களிலிருந்து கீழே பாய்ந்து பள்ளத்தாக்குகளில் சென்று,

9 நீர் கடல்களுக்கு எல்லையை வைத்தீர்.

10 தேவனே, நீரூற்றுகளிலிருந்து நீரோடைகளாக நீர் ஓடும்படி செய்தீர்.

11 நீரோடைகள் எல்லா காட்டு மிருகங்களுக்கும் தண்ணீரைத் தருகின்றன.

12 வனத்தின் பறவைகள் குளங்களின் அருகே வாழவரும்.

13 மலைகளின்மேல் தேவன் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.

14 மிருகங்கள் உண்ணும்படியாக தேவன் புல்லை முளைத்தெழச் செய்கிறார். அவர் நமக்குத் தாவரங்களைத் தருகிறார்.

15 நம்மை மகிழ்விக்கும் திராட்சைரசத்தையும்

16 லீபனோனின் பெரிய கேதுரு மரங்கள் கர்த்தருக்குரியவை.

17 அம்மரங்களில் பறவைகள் தங்கள் கூடுகளைக் கட்டும்.

18 காட்டு ஆடுகளுக்கு உயர்ந்த பர்வதங்கள் இருப்பிடமாகும்.

19 தேவனே, விடுமுறை காலம் தொடங்குவதை அறிவிக்கும்படி எங்களுக்கு சந்திரனைத் தந்தீர்.

20 எல்லா காட்டு மிருகங்களும் வெளியே வந்து

21 தேவன் கொடுக்கிற உணவிற்காக வேண்டுகிறது போல

22 அப்போது சூரியன் எழும்பும்,

23 அப்போது ஜனங்கள் தங்கள் வேலைகளுக்காகச் செல்வார்கள்,

24 கர்த்தாவே, நீர் பல அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர்.

25 சமுத்திரத்தைப் பாருங்கள், அது எவ்வளவு பெரியது!

26 நீர் உண்டாக்கின கடல் விலங்கான லிவியாதான் கடலில் விளையாடும்போது

27 தேவனே, எல்லாக்காரியங்களும் உம்மைச் சார்ந்திருக்கின்றன.

28 தேவனே, எல்லா உயிரினங்களுக்கும் அவை உண்ணும் உணவை நீர் கொடுக்கிறீர்.

29 நீர் அவற்றை விட்டு விலகும்போது அவை அஞ்சும்.

30 ஆனால் கர்த்தாவே, நீர் உமது ஆவியை அனுப்பும்போது அவை ஆரோக்கியம் பெறும்!

31 கர்த்தருடைய மகிமை என்றென்றும் தொடரட்டும்!

32 கர்த்தர் பூமியைச்சற்றே பார்த்தால் அது அதிரும்.

33 என் ஆயுள் முழுவதும் நான் கர்த்தரைப் பாடுவேன்.

34 நான் கூறுபவை அவரை மகிழ்ச்சியாக்கும் என நம்புகிறேன்.

35 பூமியிலிருந்து பாவம் மறைந்து போகட்டும்.

Ler em outra tradução

Comparar lado a lado