Oséias 7

TAM2008

1 “நான் இஸ்ரவேலைக் குணப்படுத்துவேன்.

2 அந்த ஜனங்கள் நான் அவர்களின் குற்றங்களை நினைப்பேன் என்பதை நம்பமாட்டார்கள்.

3 அவர்களது தீமை அவர்களின் அரசனை மகிழ்ச்சிப்படுத்துகிறது.

4 அப்பம் சுடுகிறவன் அப்பம் சுடுவதற்காக அடுப்பை எரிக்கிறான்.

5 நம்முடைய அரசனின் நாளில் அவர்கள் தம் நெருப்பை மேலும் சூடாக்குகின்றனர். அவர்கள் குடி விருந்துகளைக் கொடுக்கிறார்கள்.

6 ஜனங்கள் தமது இரகசிய திட்டங்களைப் போடுகிறார்கள்.

7 அவர்கள் அனைவரும் எரியும் சூட்டடுப்பாய் இருக்கிறார்கள்.

8 “எப்பிராயீம் மற்ற தேசங்களோடு கலக்கிறான்.

9 அந்நியர்கள் எப்பிராயீமின் பலத்தை அழிக்கிறார்கள்.

10 எப்பிராயீமின் பெருமை அவனுக்கு எதிராகப் பேசுகிறது.

11 எனவே, எப்பிராயீம் புரிந்துக்கொள்ளாத பேதையான சிறிய புறாவைப் போலானான்.

12 அவர்கள் அந்நாடுகளுக்கு உதவிக் கேட்டுப் போனார்கள்.

13 இது அவர்களுக்குக் கேடாகும். அவர்கள் என்னை விட்டு விலகினார்கள்.

14 அவர்கள் தம் மனப்பூர்வமாக என்னை எப்பொழுதும் அழைக்கிறதில்லை.

15 நான் அவர்களுக்குப் பயிற்சியளித்து அவர்கள் கைகளை பலப்படுத்தினேன்.

16 ஆனால் அவர்கள் வளைந்த தடியைப் போல இருந்தார்கள்.

Ler em outra tradução

Comparar lado a lado