1 “யோபுவே, மலையாடுகள் எப்போது
2 யோபுவே, மலையாடுகளும், பெண்மான்களும் எத்தனை மாதங்கள் அவற்றின் குட்டிகளைச் சுமக்க வேண்டுமென்பதை நீ அறிவாயா?
3 அம்மிருகங்கள் கீழே படுத்துக்கொள்ளும், அவற்றின் பிரசவ வலியை உணரும்போது, குட்டிகள் பிறந்துவிடும்.
4 அக்குட்டி மிருகங்கள் வயல்களில் வலிமையாக வளரும்.
5 “யோபுவே, காட்டுக் கழுதைகளைச் சுதந்திரமாக அலையவிட்டவர் யார்?
6 பாலைவனம் காட்டுக் கழுதையின் இருப்பிடமாகும்படி நான் (தேவன்) செய்தேன்.
7 காட்டுக் கழுதைகள் இரைச்சலான ஊர்களை நோக்கி சிரிக்கும்.
8 காட்டுக் கழுதைகள் மலைகளில் வாழும்.
9 “யோபுவே, காட்டுக் காளை உனக்குச் சேவை புரியச் சம்மதிக்குமா?
10 யோபுவே, நீ உன் வயல்களை உழுவதற்குக்
11 காட்டுக் காளை மிகவும் பலம் வாய்ந்தது!
12 உன் தானியத்தைச் சேகரித்து
13 “தீக்கோழி வியப்புற்று அதன் சிறகுகளை அடிக்கும்.
14 தீக்கோழி நிலத்தில் அதன் முட்டைகளை இடும்,
15 யாரேனும் அதன் முட்டைகளின்மேல் நடக்கக் கூடும் என்பதையோ,
16 தீக்கோழி அதன் குஞ்சுகளை விட்டுச் செல்கிறது.
17 ஏனெனில், நான் (தேவன்) தீக்கோழிக்கு ஞானத்தைக் கொடுக்கவில்லை.
18 ஆனால் தீக்கோழி ஓடுவதற்கென எழுந்திருக்கும்போது, அது குதிரையையும் அதில் சவாரி செய்பவனையும் பார்த்துச் சிரிக்கும்.
19 “யோபுவே, நீ குதிரைக்கு அதன் வலிமையைக் கொடுத்தாயா?
20 யோபுவே, நீ குதிரையை ஒரு வெட்டுக் கிளியைப்போல, வெகுதூரம் தாண்ட வைப்பாயா?
21 குதிரை அதன் மிகுந்த வலிமையால் சந்தோஷப்படும்.
22 அச்சத்தைப் பார்த்துக் குதிரை நகைக்கும் அது அஞ்சுவதில்லை!
23 குதிரையின் புறத்தே வீரனின் அம்பறாத்தூணி அசையும்.
24 குதிரை மிகவும் உணர்ச்சிவசப்படுகிறது!
25 எக்காளம் ஒலிக்கும்போது, குதிரை ஆர்ப்பரிக்கும்.
26 “யோபுவே, ராஜாளி அதன் செட்டைகளை விரித்துத் தெற்கு நோக்கிப் பறக்க நீ கற்பித்தாயா?
27 யோபுவே, நீ தான் கழுகிடம் உயரே வானத்தில் பறக்கச் சொன்னாயா?
28 கழுகு மலை முகப்பில் வாழ்கிறது.
29 அதன் உயரமான கோட்டையிலிருந்து கழுகு அதன் இரையை நோக்கும்.
30 பிணங்கள் இருக்குமிடத்தில் கழுகுகள் கூடும்.