1 எலிகூ தன் பேச்சைத் தொடர்ந்தான். அவன்,
2 “என்னோடு இன்னும் கொஞ்சம் பொறுமையாயிரும்.
3 நான் எனது அறிவை எல்லோரோடும் பகிர்ந்துக்கொள்வேன், தேவன் என்னை உண்டாக்கினார்,
4 யோபுவே, நான் உண்மையைக் கூறிக் கொண்டிருக்கிறேன்.
5 “தேவன் மிகுந்த வல்லமையுள்ளவர், ஆனால் அவர் ஜனங்களை வெறுப்பதில்லை.
6 தேவன் தீய ஜனங்களை வாழவிடமாட்டார்,
7 தக்க வழியில் நடப்போரைத் தேவன் கண்ணோக்குகிறார்.
8 எனவே ஜனங்கள் தண்டிக்கப்பட்டால், அவர்கள் விலங்குகளினாலும் கயிறுகளினாலும் கட்டப்பட்டால்,
9 அவர்கள் செய்தது என்னவென்பதை தேவன் சொல்வார்.
10 தேவன் தனது எச்சரிக்கைக்குச் செவிசாய்க்குமாறு அந்த ஜனங்களைக் கட்டாயப்படுத்துவார்.
11 அந்த ஜனங்கள் தேவனுக்குச் செவி கொடுத்து அவருக்குக் கீழ்ப்படிந்தால், தேவன் அவர்கள் வெற்றிக் காணச் செய்வார்.
12 ஆனால் அந்த ஜனங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தால், அப்போது அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
13 “தேவனைப்பற்றிக் கவலைப்படாத ஜனங்கள் எப்போதும் கசப்பானவர்கள்,
14 அவர்கள் ஆண் விபசாரிகளைப்போல
15 ஆனால் தேவன் ஜனங்கள் பெறும் தொல்லைகளால் அவர்களைத் தாழ்மையானவர்களாக்குவார்.
16 “யோபுவே, தேவன் உனக்கு உதவ விரும்புகிறார்.
17 ஆனால் இப்போது யோபுவே, நீ குற்றவாளியாக நியாயந்தீர்க்கப்பட்டாய்.
18 யோபுவே, செல்வங்கள் உன்னை மூடனாக்கவிடாதேயும்.
19 உனது பணம் இப்போது உனக்கு உதவாது.
20 இரவின் வருகையை விரும்பாதேயும்.
21 யோபுவே, நீ மிகவும் துன்புற்றிருக்கிறாய்.
22 “தேவன் தமது வல்லமையினால் மேன்மையுற்றிருக்கிறார்.
23 தேவன் செய்ய வேண்டுவதென்ன என்று ஒருவனும் தேவனுக்குக் கூற முடியாது.
24 தேவன் செய்த காரியங்களுக்காக அவரைத் துதிக்க வேண்டுமென நினைவுகூருங்கள்.
25 தேவன் செய்தவற்றை ஒவ்வொருவனும் காண முடியும்.
26 ஆம், தேவன் மேன்னைமயானவர்.
27 “தேவன் பூமியிலிருந்து தண்ணீரை, மேலே எடுத்து,
28 ஆகையால் மேகங்கள் தண்ணீரைப் பொழிகின்றன.
29 தேவன் மேகங்களை எவ்வாறு பரப்புகிறார் என்பதையும்
30 பாரும்! தேவன் பூமியின் மீது மின்னலைப் பரப்பி,
31 தேசங்களை அடக்கியாள்வதற்கும்
32 தேவன் அவரது கைகளால் மின்னலைப் பிடிக்கிறார்,
33 புயல் வந்துகொண்டிருப்பதை இடி எச்சரிக்கிறது.