1 “ஆனால் இப்போது, என்னைக் காட்டிலும்
2 அந்த இளைஞர்களின் தந்தைகள் எனக்கு உதவ முடியாதபடிச் சோர்ந்திருக்கிறார்கள்.
3 அவர்கள் மரித்தவர்களைப் போலிருக்கிறார்கள், அவர்கள் உண்பதற்கு எதுவுமில்லாமல் பட்டினியாயிருக்கிறார்கள்.
4 அவர்கள் பாலைவனத்திலுள்ள உப்புத் தாவரங்களைப் பறித்தெடுக்கிறார்கள்.
5 அவர்கள் பிற ஜனங்களிடமிருந்து துரத்தப்பட்டார்கள்.
6 அவர்கள் உலர்ந்த ஆற்றுப் படுகைகளிலும்,
7 அவர்கள் புதர்களில் ஊளையிடுகிறார்கள்.
8 தங்கள் நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட, பெயரற்ற,
9 “இப்போது அந்த மனிதர்களின் மகன்கள் என்னைக் கேலிச் செய்யும் பாடல்களை பாடுகிறார்கள்.
10 அந்த இளைஞர்கள் என்னை வெறுக்கிறார்கள், அவர்கள் என்னிலிருந்து தூரத்தில் போய் நிற்கிறார்கள்.
11 தேவன் என் வில்லின் நாணை அறுத்துப் போட்டு என்னைத் தளர்ச்சியடையச் செய்தார்.
12 அவர்கள் என் வலது பக்கத்தில் தாக்குகிறார்கள்.
13 அவர்கள் என் பாதையை கெடுத்தார்கள்.
14 அவர்கள் சுவரில் துளையிடுகிறார்கள்.
15 நான் பயத்தால் நடுங்குகிறேன்.
16 “இப்போது என் உயிர் நீங்கும் நிலையில் உள்ளது.
17 என் எலும்புகள் எல்லாம் இரவில் வலிக்கின்றன.
18 தேவன் என் மேற்சட்டையின் கழுத்துப் பட்டையைப் பற்றியிழுத்து
19 தேவன் என்னைச் சேற்றினுள் தள்ளினார்.
20 “தேவனே, உம்மிடம் உதவிக்காக வேண்டுகிறேன், ஆனால் நீர் பதிலளிப்பதில்லை.
21 தேவனே, நீர் என்னிடம் கொடுமையாக நடந்தீர்.
22 தேவனே, பலத்த காற்று என்னைப் பறக்கடிக்குமாறு செய்தீர்.
23 நீர் என்னை மரணத்திற்கு வழி நடத்துவீர் என அறிவேன்.
24 “ஆனால், ஏற்கெனவே அழிந்தவனை
25 தேவனே, தொல்லைகளுள்ள ஜனங்களுக்காக நான் அழுதேன் என்பதை நீர் அறிவீர்.
26 நான் நல்லவற்றை எதிர்பார்த்தபோது, தீயவை நேர்ந்தன.
27 நான் உள்ளே கிழிந்துபோனேன், என் துன்பம் நிற்கவில்லை.
28 நான் எப்போதும் துக்கமாயிருக்கிறேன், அதனால் நான் எந்த ஆறுதலும் பெறவில்லை.
29 நான் காட்டு நாய்களைப்போலவும்
30 என் தோல் நெருப்பினால் எரிந்து உரிந்து கழன்றுபோகிறது.
31 துக்கமான பாடல்களைப் பாட என் தம்புரு மீட்டப்பட்டுள்ளது.