1 ஏதோமிலிருந்து வந்துகொண்டிருக்கிற இவன் யார்?
2 “உனது ஆடைகள் ஏன் சிவப்பாக உள்ளன?
3 அவன் பதில் கூறுகிறான், “நான் திராட்சைரச ஆலை வழியாக நடந்தேன்.
4 ஜனங்களைத் தண்டிக்க நான் ஒரு காலத்தைத் தேர்ந்தெடுக்கிறேன்.
5 நான் சுற்றிலும் பார்த்தேன். ஆனால் எவரும் எனக்கு உதவுவதைக் காணவில்லை.
6 நான் கோபமாக இருக்கும்போது, நான் ஜனங்களை மிதித்தேன்.
7 கர்த்தர் தயவாக இருக்கிறார் என்று நினைவுகொள்வேன்.
8 கர்த்தர், “இவர்கள் என்னுடைய ஜனங்கள்.
9 ஜனங்களுக்கு நிறைய துன்பங்கள் இருந்தன.
10 ஆனால், அந்த ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகத் திரும்பினார்கள்.
11 ஆனால், கர்த்தர் நீண்ட காலத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பதை இப்போதும் நினைவுகொள்கிறார்.
12 கர்த்தர் மோசேயை அவரது வலது கையால் வழி நடத்தினார்.
13 கர்த்தர் ஜனங்களை ஆழமான கடல் வழியாக நடத்தினார்.
14 ஒரு பசு வயலில் நடந்து செல்லும்போது அது கீழே விழாது.
15 கர்த்தாவே! வானத்திலிருந்து கீழே பாரும்!
16 பாரும். நீர் எமது தந்தை!
17 கர்த்தாவே, எங்களை நீர் ஏன் உம்மிடமிருந்து தள்ளுகிறீர்.
18 உமது பரிசுத்தமான ஜனங்கள் அவர்களின் நாடுகளில் கொஞ்சம் காலமே வாழ்ந்தார்கள்.
19 சிலர் உம்மைப் பின்பற்றவில்லை.