1 இது மோவாயைப் பற்றி துக்கமான செய்தி.
2 அரசனது குடும்பத்தினரும் தீபோனின் ஜனங்களும் அழுவதற்குத் தொழுதுகொள்கிற இடங்களுக்குப் போனார்கள்.
3 மோவாபின் எல்லா இடங்களிலும் வீட்டுக் கூரைகளிலும், தெருக்களிலும்,
4 எஸ்போன் மற்றும் எலெயாலே நகர ஜனங்கள் உரத்து அழுதுகொண்டிருந்தனர்.
5 மோவாபுக்காக எனது இதயம் துயரத்தோடு அழுகிறது.
6 ஆனால் நிம்ரீம் புருக் பாலைவனமாகக் காய்ந்திருக்கிறது.
7 எனவே, ஜனங்கள் தமக்குச் சொந்தமானவற்றைச் சேகரித்துக்கொண்டு மோவாபை விட்டு விலகுகிறார்கள்.
8 மோவாபின் எல்லா இடங்களிலும் அழுகையைக் கேட்கலாம்.
9 தீமோனின் தண்ணீரானது இரத்தத்தால் நிறைந்திருக்கும்.