1 யெகோவாவே, எங்களுக்குச் சம்பவித்ததை நினைத்தருளும்;
2 எங்களுடைய சொத்து அந்நியரின் வசமாகவும், எங்களுடைய வீடுகள் வெளித்தேசத்தாரின் வசமாகவும் மாறியது.
3 திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை;
4 எங்கள் தண்ணீரைப் பணத்திற்கு வாங்கிக்குடிக்கிறோம்;
5 பாரம்சுமந்து எங்கள் கழுத்து வலிக்கிறது;
6 உணவினால் திருப்தியடைய எகிப்தியர்களுக்கும் அசீரியர்களுக்கும் எங்களை ஒப்படைத்தோம்.
7 எங்கள் முற்பிதாக்கள் பாவம்செய்து இறந்துபோனார்கள்;
8 அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்;
9 வனாந்திரத்தில் இருக்கிறவர்களின் பட்டயத்தினால்,
10 பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அடுப்படியைப்போல் கறுத்துப்போனது.
11 சீயோனில் இருந்த பெண்களையும் யூதா பட்டணங்களில் இருந்த இளம்பெண்களையும் அவமானப்படுத்தினார்கள்.
12 தலைவர்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை தொங்கவிட்டார்கள்;
13 வாலிபர்களை இயந்திரம் அரைக்கக் கொண்டுபோனார்கள்;
14 முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும்,
15 எங்கள் இருதயத்தின் மகிழ்ச்சி ஒழிந்துபோனது;
16 எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ, நாங்கள் பாவம்செய்தோமே.
17 அதினால் எங்கள் இருதயம் பலவீனமானது;
18 பயனற்றுக்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது.
19 யெகோவாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்;
20 தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நீண்ட நாட்களாக எங்களைக் கைவிட்டிருப்பது என்ன?
21 யெகோவாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்;
22 எங்களை முற்றிலும் வெறுத்துவிடுவீரோ?