1 பின்னும் யெகோவா யோபுக்கு பதிலாக:
2 “சர்வவல்லமையுள்ள தேவனுடன் வழக்காடி அவருக்குப் புத்தி சொல்லுகிறவன் யார்?
3 அப்பொழுது யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக:
4 இதோ, நான் எளியவன்;
5 நான் இரண்டொருமுறை பேசினேன்; இனி நான் மறுமொழி கொடுக்காமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.
6 அப்பொழுது யெகோவா பெருங்காற்றில் இருந்து யோபுக்கு பதில் சொன்னார்.
7 இப்போதும் மனிதனைப்போல நீ ஆடையைக்கட்டிக்கொள்;
8 நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ?
9 தேவனுடைய பலத்த கைகளைப்போல உனக்கு கைகளுண்டோ?
10 இப்போதும் நீ முக்கியத்துவத்தாலும் மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து,
11 நீ உன் கோபத்தின் கடுமையை வீசி,
12 பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து,
13 நீ அவர்களை ஏகமாகப் புழுதியிலே புதைத்து,
14 அப்பொழுது உன் வலதுகை உனக்கு பாதுகாப்பைக் கொடுக்கும் என்று சொல்லி
15 இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்;
16 இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும்,
17 அது தன் வாலைக் கேதுரு மரத்தைப்போல் நீட்டுகிறது;
18 அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும்,
19 அது தேவனுடைய படைப்புகளில் முதன்மையான ஒரு படைப்பு,
20 காட்டுமிருகங்கள் அனைத்தும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும்.
21 அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும்,
22 தழைகளின் நிழல் அதை மூடி, நதியின் தண்ணீர்கள் அதைச் சூழ்ந்துகொள்ளும்.
23 இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது;
24 அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கமுடியும்?