1 கர்த்தாவே, நீர் ஜனங்களைத் தண்டிக்கும் தேவன்.
2 நீர் முழு பூமிக்கும் நீதிபதி.
3 கர்த்தாவே, எத்தனை காலம் தீயவர்கள் கேளிக்கைகளில் திளைத்திருப்பார்கள்?
4 எதுவரைக்கும் அக்குற்றவாளிகள்
5 கர்த்தாவே, அவர்கள் உமது ஜனங்களைத் தாக்குகிறார்கள்.
6 அத்தீயோர் விதவைகளையும் இத்தேசத்தைப் பார்க்க வருவோரையும் கொல்கிறார்கள்.
7 அவர்கள் அத்தீயக் காரியங்களைச் செய்வதைக் கர்த்தர் பார்ப்பதில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்.
8 தீய ஜனங்களாகிய நீங்கள் மூடர்கள்.
9 தேவன் நமது காதுகளை உண்டாகினார்.
10 தேவன் அந்த ஜனங்களை ஒழுங்குபடுத்துவார்.
11 ஜனங்கள் நினைப்பதை தேவன் அறிகிறார்.
12 கர்த்தர் ஒழுங்குபடுத்தும் மனிதன் மகிழ்ச்சியாயிருப்பான்.
13 தேவனே, குழப்பம் நேருகையில் அவன் அமைதியாயிருக்க நீர் அவனுக்கு உதவுவீர்.
14 கர்த்தர் அவரது ஜனங்களை விட்டு விலகுவதில்லை.
15 நீதி திரும்பும், அது நியாயத்தைக் கொண்டு வரும்,
16 தீயோரை எதிர்ப்பதற்கு ஒருவனும் உதவவில்லை.
17 கர்த்தர் எனக்கு உதவியிராவிட்டால்
18 நான் விழத்தயாராயிருப்பதை அறிகிறேன்,
19 நான் கவலையடைந்து கலங்கியிருந்தேன்.
20 தேவனே, நீர் அநீதியுள்ள நீதிபதிகளுக்கு உதவுவதில்லை.
21 அந்நீதிபதிகள் நல்லோரைத் தாக்குகிறார்கள்.
22 ஆனால் உயரமான பர்வதங்களில் கர்த்தர் எனக்குப் பாதுகாப்பிடம்.
23 அத்தீய நீதிபதிகள் செய்த தீய காரியங்களுக்காக தேவன் அவர்களைத் தண்டிப்பார்.