1 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்.
2 கர்த்தாவே, தொல்லைகள் எனக்கு நேரும்போது என்னைவிட்டு உம்மை திருப்பிக் கொள்ளாமலிரும்.
3 என் வாழ்க்கை புகையைப்போல் மாய்ந்து கொண்டிருக்கிறது.
4 என் வலிமை போயிற்று.
5 என் துயரத்தினால் என் எடை குறைந்து கொண்டிருக்கிறது.
6 பாலைவனத்தில் வாழும் ஆந்தையைப்போல் தனித்திருக்கிறேன்.
7 என்னால் தூங்க இயலவில்லை.
8 என் பகைவர்கள் என்னை எப்போதும் அவமானப்படுத்துகிறார்கள்.
9 என் மிகுந்த துயரம் மட்டுமே எனக்கு உணவாகிறது.
10 ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னிடம் கோபமாயிருக்கிறீர்.
11 பகலின் இறுதியில் தோன்றும் நீளமான நிழல்களைப்போன்று என் வாழ்க்கை முடிவடையும் நிலையில் உள்ளது.
12 ஆனால் கர்த்தாவே, நீர் என்றென்றும் வாழ்வீர்!
13 நீர் எழுந்து சீயோனுக்கு ஆறுதலளிப்பீர்.
14 உமது பணியாட்கள் அதின் (சீயோனின்) கற்களை நேசிக்கிறார்கள்.
15 ஜனங்கள் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்.
16 கர்த்தர் மீண்டும் சீயோனைக் கட்டுவார்.
17 தாம் உயிரோடு விட்ட ஜனங்களின் ஜெபங்களுக்கு தேவன் பதில் தருவார்.
18 வரும் தலைமுறையினருக்காக இக்காரியங்களை எழுது.
19 மேலேயுள்ள தமது பரிசுத்த இடத்திலிருந்து கர்த்தர் கீழே பார்ப்பார்.
20 சிறைப்பட்டோரின் ஜெபங்களை அவர் கேட்பார்.
21 அப்போது சீயோனின் ஜனங்கள் கர்த்தரைக் குறித்துக் கூறுவார்கள்.
22 தேசங்கள் ஒருமித்துச் சேரும்.
23 என் ஆற்றல் என்னை விட்டகன்றது.
24 எனவே நான், “இளைஞனாயிருக்கும்போதே நான் மரிக்கவிடாதேயும்.
25 பல காலத்திற்கு முன்பு, நீர் உலகை உண்டாக்கினீர்.
26 உலகமும் வானமும் ஒழிந்துபோகும் ஆனால் நீரோ என்றென்றும் வாழ்வீர்.
27 ஆனால் தேவனாகிய நீர் என்றும் மாறுவதில்லை.
28 நாங்கள் இன்று உமது பணியாட்கள்.