1 “இப்போது, யோபுவே, என்னைக் கவனித்துக் கேளும்:
2 நான் பேச தயாராயிருக்கிறேன்.
3 என் இருதயம் நேர்மையானது, எனவே நேர்மையான வார்த்தைகளைப் பேசுவேன்.
4 தேவனுடைய ஆவி என்னை உண்டாக்கிற்று.
5 யோபுவே, நான் சொல்வதைக் கேளும், முடிந்தால் எனக்குப் பதில் சொல்லும்.
6 தேவனுக்கு முன்பாக நீயும் நானும் சமமானவர்களே.
7 யோபுவே, எனக்கு அஞ்சாமல் இரும்.
8 “ஆனால் யோபுவே, நீ சொன்னதை நான் கேட்டேன்.
9 நீ, ‘நான் பரிசுத்தமானவன் நான் களங்கமற்றவன்.
10 நான் தவறேதும் செய்யவில்லை.
11 தேவன் என் கால்களில் விலங்கிட்டார்.
12 “ஆனால் யோபுவே, நீ இவ்விஷயத்தில் தவறியிருக்கிறாய்.
13 யோபுவே, நீ தேவனோடு விவாதிக்கிறாய்.
14 தேவன் தாம் செய்கிற எல்லாவற்றையும் விளக்கலாம்.
17 ஜனங்கள் தவறு செய்வதை நிறுத்தவும்
18 மரணத்தின் இடத்திற்குப் போகாதபடி அவர்களைக் காப்பதற்காக தேவன் ஜனங்களை எச்சரிக்கிறார்.
19 “அல்லது ஒருவன் படுக்கையில் கிடந்து தேவனுடைய தண்டனையை அனுபவிக்கும்போது ஒருவன் தேவனுடைய சத்தத்தைக் கேட்கக்கூடும்.
20 அப்போது அம்மனிதன் உண்ணமுடியாது.
21 அவன் மிகவும் மெலிந்து எலும்புகள் வெளித் தோன்றும்வரை
22 அம்மனிதன் மரணத்தின் இடத்திற்கு அருகே இருக்கிறான்.
23 தேவனிடம் ஆயிரக்கணக்காக தூதர்கள் இருப்பார்கள்.
24 அந்த தூதன் அம்மனிதனிடம் இரக்கம் காட்டலாம்.
25 அப்போது அம்மனிதனின் உடல் மீண்டும் இளமையும், வலிமையும் பெறும்.
26 தேவனிடம் ஜெபிப்பான், தேவன் அவனுடைய ஜெபத்திற்குப் பதில் தருவார்.
27 அப்போது அம்மனிதன் ஜனங்களிடம் அறிக்கையிடுவான்.
28 மரணத்தின் இடத்திற்குப் போகாதபடி, தேவன் என் ஆத்துமாவைக் காப்பாற்றினார்.
29 “அம்மனிதனுக்காக மீண்டும், மீண்டும் தேவன் எல்லாவற்றையும் செய்கிறார்.
30 ஏனென்றால், அம்மனிதனை எச்சரித்து, அவனது ஆத்துமாவை மரணத்தின் இடத்திலிருந்து காப்பதால்
31 “யோபுவே, என்னை கவனியும்.
32 ஆனால் யோபுவே, நீர் என்னோடு கருத்து வேறுபாடு கொள்ளவிரும்பினால், அப்போது நீர் பேசத் தொடங்கும்.
33 ஆனால் யோபுவே, நீர் கூற எதுவுமில்லையெனில், நான் சொல்வதைக் கேளும்.