Isaías 23

TAM2008

1 தீருவைப் பற்றிய துயரச் செய்தி:

2 கடற்கரையில் வாழும் ஜனங்களே, துக்கமாய் இருங்கள்.

3 அந்த மனிதர்கள் கடல்களில் பயணம் செய்து தானியங்களைத் தேடினார்கள்.

4 சீதோனே, நீ மிகவும் துக்கமாக இருக்க வேண்டும்.

5 தீருவைப் பற்றிய செய்திகளை எகிப்து கேட்கும்.

6 கப்பல்களே நீங்கள் தர்ஷீசுக்குத் திரும்புங்கள்.

7 கடந்த காலத்தில், தீரு நகரில் சந்தோஷமாக இருந்தீர்கள்.

8 தீரு நகரம் பல தலைவர்களை உருவாக்கியிருக்கிறது.

9 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இருந்தார்.

10 தர்ஷீஸிலிருந்து வந்த கப்பல்களே!

11 கர்த்தர் அவரது கையைக் கடலுக்கு மேல் நீட்டியிருக்கிறார்.

12 கர்த்தர் கூறுகிறார், “கன்னியாகிய சீதோனின் மகளே, நீ அழிக்கப்படுவாய்.

13 எனவே தீரு ஜனங்கள் கூறுகிறார்கள், “நமக்குப் பாபிலோன் ஜனங்கள் உதவுவார்கள்!

14 எனவே, துக்கமாயிருங்கள், தர்ஷீஸிலிருந்து வந்த கப்பல்களே,

15 70 ஆண்டுகளுக்கு ஜனங்கள் தீருவை மறப்பார்கள். (இது ஒரு அரசனின் ஆட்சிக்கால அளவு). 70 ஆண்டுகளுக்குப் பிறகு, தீரு இந்தப் பாடலில் வரும் வேசிக்குச் சமானமாய் இருக்கும்.

16 “ஆண்களால் மறக்கப்பட்ட பெண்ணே,

17 70 ஆண்டுகளுக்குப் பிறகு, தீருவின் வழக்கை கர்த்தர் மீண்டும் மதிப்பீடு செய்வார். அவர் அவளுக்கு ஒரு தீர்வைக் கொடுப்பார். மீண்டும் தீரு வணிகத்தைப் பெறும் பூமியின் அனைத்து நாடுகளுக்கும் தீரு வேசியாக விளங்கும்.

18 ஆனால் தீரு தான் சம்பாதிக்கும் பணத்தைக் தனக்கென்று வைக்காது. தனது வணிகத்தால் வரும் லாபத்தைத் தீரு கர்த்தருக்காகப் பாதுகாக்கும். தீரு அச்செல்வத்தைக் கர்த்தருக்குச் சேவை செய்யும் ஜனங்களுக்குக் கொடுக்கும். எனவே, கர்த்தருடைய ஊழியக்காரர்கள் முழுமையாக சாப்பிடுவார்கள், அவர்கள் மென்மையான ஆடைகளை அணிந்துகொள்வார்கள்.

Ler em outra tradução

Comparar lado a lado