1 பின்பு யாக்கோபு தன் அனைத்து பிள்ளைகளையும் அழைத்து, “பிள்ளைகளே! என்னிடம் வாருங்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்கிறேன்.
2 “சேர்ந்து வாருங்கள், கவனியுங்கள். யாக்கோபின் பிள்ளைகளே.
3 “ரூபனே! என் முதல் மகனே! நீ எனக்கு முதல் பிள்ளை.
4 ஆனால் உனது உணர்ச்சிகளை வெள்ளம்போல உன்னால் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கிறது.
5 “சிமியோனும் லேவியும் சகோதரர்கள்.
6 இரகசியமாகப் பாவம் செய்யத் திட்டமிடுவார்கள்.
7 அவர்களின் கோபமே ஒரு சாபம்.
8 “உன்னை உன் சகோதரர்கள் போற்றுவார்கள்.
9 யூதா ஒரு சிங்கத்தைப் போன்றவன்.
10 யூதாவின் குடும்பத்தில் வருபவர்கள் அரசர் ஆவார்கள்.
11 அவன் தன் கழுதையைத் திராட்சைக் கொடியில் கட்டி வைப்பான்.
12 அவன் கண்கள் திராட்சைரசத்தினால் சிவப்பாகும்.
13 “இவன் கடற்கரையில் வசிப்பான்.
14 “இசக்கார் ஒரு கழுதையைப்போல கடினமாக உழைப்பான்.
15 தன் ஓய்விடத்தை நன்றாக இருக்கும்படி பார்த்துக்கொள்வான்.
16 “தாண் இஸ்ரவேல் குடும்பத்தில் ஒருவனாக
17 இவன் சாலையோரத்தில் அலையும் பாம்பைப் போன்றவன்.
18 “கர்த்தாவே நான் உமது இரட்சிப்புக்காகக் காத்திருக்கிறேன்.
19 “ஒரு கொள்ளைக் கூட்டம் காத்தைத் தாக்கும்.
20 “இவனது நிலம் அதிகமாக விளையும்.
21 “இவன் சுதந்திரமாக ஓடுகிற மானைப் போன்றவன்.
22 “இவன் வெற்றி பெற்றவன்.
23 பலர் அவனுக்கு எதிராகப் போரிடுவார்கள்.
24 ஆனால் அவன் பலம் வாய்ந்த வில்லாலும் திறமையான கைகளாலும் சண்டையில் வென்றான்.
25 தேவன் உன்னை ஆசீர்வதிக்கிறார்.
26 எனது பெற்றோர்களுக்கு எவ்வளவோ நன்னமைகள் ஏற்பட்டன எனினும் எனது ஆசீர்வாதங்கள் அவற்றைவிட மேலானது.
27 “பென்யமீன் ஒரு பசித்த நரி போன்றவன்.
28 இவர்கள் அனைவரும் இஸ்ரவேலின் 12 குடும்பத்தினர். இவ்வாறு யாக்கோபு அவர்கள் ஒவ்வொரு வருக்கும் அவரவருக்குப் பொருத்தமான ஆசீர்வாதங்களைக் கொடுத்தான்.
29 பின் இஸ்ரவேல் ஒரு ஆணையிட்டான். “நான் மரிக்கும்போது என் ஜனங்களோடு இருக்க விரும்புகிறேன். என் முற்பிதாக்களோடு நான் அடக்கம் செய்யப்பட வேண்டும். அந்தக் கல்லறை ஏத்தியரிடம் வாங்கிய எப்பெரோனில் உள்ளது.
30 அந்தக் குகை மம்ரேக்கு அருகில் மக்பேலா எனும் இடத்தில் வயலில் உள்ளது. இது கானான் நாட்டில் உள்ளது. இதனை ஆபிரகாம் எப்ரோனிடமிருந்து விலைக்கு வாங்கி கல்லறையாக மாற்றிவிட்டார்.
31 ஆபிரகாமும் அவன் மனைவி சாராளும் அதே குகையில் அடக்கம் செய்யப்பட்டனர். ஈசாக்கும் அவர் மனைவி ரெபெக்காளும் அதே குகையில் அடக்கம் செய்யப்பட்டனர். நான் என் மனைவி லேயாளையும் அதே குகையில் அடக்கம் பண்ணினேன்.
32 அந்தக் குகை இருக்கும் நிலம் ஏத்தின் மகன்களிடமிருந்து வாங்கப்பட்டது” என்றான்.
33 யாக்கோபு பேசி முடித்ததும் படுத்தான். கால்களைக் கட்டிலின்மேல் மடக்கியபடியே மரணமடைந்தான்.